search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"

    • மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அடுத்த எஸ்.கே.சி. சாலை முதல் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் மதிவதனசுந்தரம் (31). என்ஜினீயரிங் பட்டதாரி. அவரது தந்தைவுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    சந்திரசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகரன் ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார். மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதிவதனசுந்தரம் கியாஸ் சிலிண்டரில் டியூப் சொருகி, அதனை மூக்கில் வைத்து பின்னர் பிளாஸ்டிக் கவரினை முகத்தில் போட்டு அந்த சிலிண்டர் வாயுவை சுவாசித்து மதிவதனசுந்தரம் தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரசேகரன் மகன் இருக்கும் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மதிவதன சுந்தரத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த கவுரி சங்கர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகும் அதில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டவர்-1 மற்றும் டவர்-2 ஆகிய 2 கட்டிடங்களையும் இணைக்கும் சிறிய பாலம் போன்ற பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார்.

    சுமார் 30 அடி உயர மாடியில் இருந்து குதித்ததில் அவரது உடல் சிதறியது. இதைப்பார்த்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரி வார்டுக்கு தூக்கி சென்றனர். பணியில் இருந்த டாக்டர்கள் விரைந்து வந்து பரிசோதித்ததில் வாலிபர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபரின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் மாடியில் இருந்து குதித்த வாலிபரின் பெயர் கவுரி சங்கர் என்பது தெரிய வந்தது. 32 வயதான அவர் வயிற்று வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதற்காக கடந்த 9-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவுரி சங்கரின் தாய் விமலா உடனிருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில்தான் கவுரிசங்கர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த கவுரி சங்கர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகும் அதில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கவுரி சங்கரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
    • இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனை மடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது ேவலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர் பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.

    இதையடுத்து உறவி னர்கள்அவரை உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவி னர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனம் உடைந்த தாமோதரன் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • வாலிபர் தற்கொலை குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி மீனா. இவர்களது மகன் தாமோதரன் (18), பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இதையடுத்து படிப்பை தொடருமாறும், அல்லது வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்டை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த தாய் மீனா அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சென்னைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது திடீரென நெஞ்சு வலிப்பதாக தாமோதரன் கூறினார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார்.
    • விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது38). பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவர் மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீடு திரும்பிய ராஜசேகரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜசேகர் படுக்கையறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    • கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

    நாகர்கோவில் : தக்கலை அருகே கிருஷ்ண மங்கலம் அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    மணிசந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் மணிசந்தர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் நிஷாந்தி கோபித்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதனால் மன வருத்தம் அடைந்த மணி சந்தர் வீட்டுக்குள் சென்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக நிஷாந்தி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி சந்தர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தக்கலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கீழே விழுந்து மயங்கிய வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் சுப்பிரமணி (வயது 32).

    இவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு சுப்பிரமணி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உள்ளார். பின்னர் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியை பிடித்தபோது அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்து மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா மகன் கார்த்திக் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் வசித்து வந்த கார்த்திக் கடந்த 1 வாரமாக கள்ளிப்பட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.
    • பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது26). இவர் சொந்தமாக மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அதனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று அய்யப்பன், அய்யத்தூரில் உள்ள தனியார் கல்லுாரி பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த அய்யப்பன் யார்? யாரிடம்? இருந்து பணம் வாங்கினார்? அவருக்கு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன்(23). இவருக்கும் வீரலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் பெண்ணின் உடலை எரித்தனர். இது தொடர்பாக சவுந்தரபாண்டியன் மற்றும் உறவினர்கள் மீது சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் தனது சகோதரி வீட்டின் மாடி அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத் தன்று நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து சகோதரி அங்கு சென்று பார்த்த போது சவுந்தரபாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் சவுந்தர பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகரில் உள்ள பாண்டியன்நகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(20). இவர் கடந்த சில மாதங்க ளாக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் ரமேஷ் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை வாபஸ் பெறுமாறு ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னர் அந்த பெண்ணிடம் வலியுறுத்தினர். ஆனால அவர் மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன்ந கர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது
    • வாலிபர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே ஆட்டுபாறையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது25). இவருக்கு திருமணமாகி லத்திகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அழகுபொன்னு கடமலை க்குண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.
    • கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (21). இவர் கடந்த 22-4-2023 அன்று தனது பெற்றோரை கொலை செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.

    வீட்டு வந்த நாள் முதல் கார்த்தி பெற்றோரை தான் கொல்லவில்லை. என்மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர் என புலம்பி தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கூறி வந்துள்ளார். அதற்கு அக்கா கலைச்செல்வி, கார்த்திக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கலைச்செல்வி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் உள்ள விட்டத்தில் கார்த்தி தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×